நாகையிலிருந்து சென்னை செல்லும் அரசு பேரூந்தில் சன்னலோர இருக்கைக்கிடைத்ததில் மணிவண்ணனுக்கு நிம்மதியாகஇருந்தது.இரவு 8 1/2 மணிக்கு சென்னை சென்றடையும்.அங்கிருந்து மத்திய ரயில்நிலையம் சென்று இரவு10 1/2 மணிக்கு புதுதில்லி புறப்படும் வண்டியைப்பிடிக்கவேண்டும்.பேரூந்து சென்னையை நோக்கிப்றப்பட்டதும் இவனதுநினைவுகள் பின்னோ KKI CEL KIRATHU.தனது பெற்றோர்கள் விரும்பியது போலவே அயல் நாடெல்லாம் செல்லாமல் தனதுதாய்நாட்டிலேயே தனக்கு தன் தகுதிக்கேற்பஒரு நல்ல வேலை க்கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகருந்தது.நினைவுகள்பின்னோக்கி செல்கிறது.பிளஸ்2 வகுப்பில் நாகை மாவட்டதிலேயே ஆதிதிராவிடமாணவர் பிரிவில் முதல் மாணவனாக வந்தது,அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்று தன் பள்ளியிலேயே முதலாவாதக வந்து எல்லோரது பாராட்டையும்பெற்றது,தமிழக அரசுஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ரூபாய்5000/ க்கு 6வருட தேசிய சேமிமிப்புபத்திரம் பரிசாகப்பெற்றது,தனது பள்ளியின் தலைமைஆசிரியரின் மூலமாக நாகை மாவட்டத்து ரோட்டரி சங்கம் அவனைக்கவுரவித்து ரூபாய் 5001/வெகுமதியளித்தது.அவன் சாதாரண விவசாயாக்குடும்பத்தைச்சேர்ந்தவன்.மேற்கொண்டு படிப்பைத்தொடருவதென்பது இயலாத ஒன்றுதான்.இந்நிலையில் அவனது பள்ளியின்தலைமை ஆசிரியர் அவனை அரசு வங்கிஒன்றுக்கு அழைத்துச்சென்று ,அவனதுமதிப்பெண்களைக்காட்டி அவனது நிலையை எடுத்துக்கூறினார். அந்தப்பள்ளியின்தலைமைஆசிரியரைப்போலவே,அந்த வங்கியின் மேலாளரும் மனிதநேயம் மிக்கவராக இருந்ததால் மேற்படிப்பிற்கு தேவையான கல்விக்கடன் உடனே கிடைத்தது.அண்ணாபல்கலைக்கழகத்தில் கட்டுமானத்துறையை விரும்பி எடுத்துப்படித்தான்.அதிலும் பல்கலைகழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சிபெற்றான். இந்த ஒரு வருடத்தில் அவனுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து பல நிறுவனங்களிலிருந்தும் நல்ல ஊதியத்தில் அழைப்புகள் வந்தது.ஆனால் அவனது அப்பா வெளிநாடு அனுப்ப சம்மதிக்கவில்லை.ஒரு முறை வங்கியின் மேலாளர் அவனது அப்பாவை அழைத்து இது பற்றி பேசும்போது அவன் அப்பாகூறியதைக்கேட்டு வங்கி மேலாளரே வியந்துபோனார்."ஐயா,என் மகன் பொறியியலியல் சிறப்பாகத்தேர்ச்சி யடைந்திருப்பது தங்களின் வங்கியின் கடன் மூலம்தான்.இது இந்திய அரசு அளித்த உதவி.அதனால் அவன் உழைப்பும்,சிந்தும்வியர்வையும் இந்த நாட்டிற்குதான் சொந்தமாகவேண்டும்.அதுதான் அவன் இந்தநாட்டிற்கு செய்யும் கைம்மாறு.அதைவிட அவன் எனக்கு ஒரே மகன்.நான் நினைத்த போது அவனப்பார்க்கவேண்டும்.அவ்ன் நினைத்த போது எங்களைப்பார்க்கவேண்டும்.அதற்கு அவன் இந்தியாவின் எங்கோ ஒருமூலையில் வேலைப்பார்தால் போதும்.அதைவிட்டு உலகத்தின் எங்கோஒருமூலையில் இருந்துக்கொண்டு,பெற்றோர்களையும்,உறவினர்கள்,நண்பர்கள் ,பிறந்தஊர் இவற்றை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்தை மனதில் தேக்கிக்கொண்டு அவன் எனக்கு அனுப்புகின்ற பணத்தை நான் வாங்கும்போது அதில் அவனது ஏக்கம்தான்எனக்கு தெரியும்.அரைவயிறு கஞ்சி குடித்தாலும் அவன் மனைவி மக்களோடு நாங்களிருக்க வேண்டும். இதுதான் என் ஆசை"
வங்கி மேலாளர் அந்த ஏழை விவசாயின் பதிலைக்கேட்டு அசந்துபோனார்.வட்டிக்குகடன் வாங்கி தன் பிள்ளைகளை வெளிநாட்டிற்குஅனுப்பி சம்பாதிக்க நினைக்கும்பெற்றோர்களு க்கு மத்தியில் அவனது அப்பா வித்தியாசமானவராகத்தான் தெரிந்தார்.எப்படியோஅவன் அப்பாவின் விருப்பப்படியே தலை நகர் தில்லியில்,இந்தியாவின்மிகச்சிறந்த ஒரு கட்டுமானநிறுவனத்தில் வேலைக்கிடைத்துள்ளது.அவன், கட்டுமானத்துறையில் மேலும் "தரக்கட்டுப்பாடும் மத்ப்பீடும்" என்ற பிரிவில் 6 மாதபட்டயப்படிப்பையும் முடித்திருந்தான்.தன் வேலையின் நியமன உத்தரவை மீண்டும் ஒருமுறைப்பார்க்க வ்ரும்பினான்.தன் இருக்கைக்குமேலிருந்த பெட்டிக்குள்ளிருந்த சிறிய கோப்பை எடுத்து அதிலிருந்த தன் நியமன உத்தரவை ஆசையுடன் பார்க்கிறான்.அவனது புகைப்படம் ஒட்டி அழகாக அச்சிடப்பட்டுள்ளது. மாதஊதியம் ரூபாய் 45000/,தங்கிக்கொள்ள இலவச குடியிருப்பு.குடியிருப்பிலிருந்துஅலுவலகம் சென்றுவர நிறுவனத்திலிருந்து இலவச
கார்வசதி.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பணியில் அமர்ந்ததும் முதல்வேலையாக அப்பாவையும், அம்மாவையும் அழைத்துவந்து தில்லி முழுவதும் சுற்றிக்காண்பிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.அப்படி யே இருக்கையில் சாய்ந்து நன்றாகத்தூங்கிப்போனான். "எல்லாரும் ஏறங்குங்க என்ற" குரல் கேட்டு சட்டென்று விழித்துக்கொன்டன் .கோயம்பேடு பஸ் நிலையம் வந்துவிட்டது .நேரத்தைப்பார்க்கிறான் .இரவு ஒனபதாகிவிட்டது.மத்திய ரயில்நிலையம் சென்று பத்தரை மணிக்கு தில்லி செல்லும் ரயிலைப்பிடித்தாகவேண்டும் .அதற்குள் பாதி பஸ் காலியாகிவிட்டது .அவசரமாக கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்குகிறான் .மத்திய ரயில்நிலையம்வருவதற்குள் மணி பத்தாகிவிட்டது . தான் செல்லவேண்டிய புகைவண்டியும் தயாராகநிற்கிறது.உணவகம் சென்று சாப்பிட்டால் நேரமாகிவிடுமென்றுபார்செலாகவாங்கிக்கொண்டு ,நடைமேடையின் இருக்கையின்மேல் அமர்ந்து பெட்டியைத்திறக்கிறான்.பயனசிஇட்டு இருந்த கோப்பைக்காணவில்லை.
கோப்பைக்காணவில்லையென்றதும் மூச்சேனின்றுவிடும்போலாகிவிட்டது.அப்போதுதான் ,ஃபைலைப்பார்த்துக்கொண்டிருக்கும்போதே பஸ்ஸில் தூங்கிப்போனது நினைவுக்கு வருகிறது.தூங்கும்போது நழுவி
இருக்கைக்குகீழேவிழுந்திருக்கவேண்டும்.அவனுக்கு என்னசெய்வதென்றேபுரியவில்லை.இதயமேநின்றுவிடும்போலிருக்கிறது.கை,கால்களெல்லாம் வெலவெலத்துப்போகிறது.தன் கவனக்குறைவை நினைத்து,தலையில் கைவைத்துக்கொண்டு அப்படியேஅமர்ந்துவிடுகிறான்.கைக்கு எட்டியது வாய்க்குஎட்டாமல் போய்விட்தேஎன்று எண்ணிக்கொண்டு நேரத்தைப்பார்க்கிறான்.புகைவண்டி புறப்படுவதற்கு இன்னும் 10 நிமிடங்களே உள்ளது.கண்ணை இருட்டிக்கொண்டு மயக்கம் வரும்போல் இருக்கிறது. அப்போது
அவன் பெயரை உரக்கக் கூப்பிடுவதுபோலுணர்ந்து மேலேபார்க்கிறான்.புகைவண்டிகளின் வந்துபோகும் நேரத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கியில் தன் முகவரியை ச்சொல்லி உடனேகட்டுப்பாட்டு அறைக்கு வரும்படி அறிவிக்கப்படுகிறது.கட்டுப்பாட்டு அறை எங்குள்ளது என்றுகேட்டுக்கொண்டு ஓடுகிறான்.மேல்மூச்சு வாங்க ஓடிச்சென்று நிலைய அதிகாரியின்முன் நிற்கிறான்.அவரது மேஜையின்மேல் அவனது ஃபைல் இருக்கிறது. தனது அப்பாவையொத்த வயதுடைய பெரியவர் ஒருவரும் நின்றுக்கொண்டிருக்கிறார். அவனைப்பார்த்த நிலையாதிகாரி உடனேஃபைலைத்திறந்துப்பார்த்துவிட்டுஅவனைப்பார்த்துக்கேட்கிறார். உங்கள் ஃபைல் தானா, பாருங்ககள்".வாங்கிப்பார்க்கிறான்.அவனது புகைப்படமொட்டிய பணி நியமன உத்தரவு,கல்வி மற்றும் தகுதிச்சான்றிதழ்கள்,பயணச்சீட்டு உட்பட அனைத்தும் அப்படியேஉள்ளது."இதைநீங்கள் பஸ்ஸில் தவறவிட்டுள்ளீர்கள்.தங்களின் பின்னிருக்கையில் அமர்ந்துவந்த இவர் தனது காலுக்கடியில் இந்த ஃபைலைப்பார்த்து ,நீங்கள் இங்குதான்வந்திரூக்கக்கூடும் என்று உடனே இவர் இங்கு வந்து எப்படியாவது இதைத்தங்களிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்" என்றார் இருகரம் கூப்பி அவரை வணங்குகிறான்.கண்களிரண்டிலும் கண்ணீர் நிரம்பிவழிகிறது.குனிந்து அவர் பாதம் தொட்டுவணங்கப்போனவனை அப்படியேபிடித்துக்கொள்கிறார்." தம்பி, உன்னைப்பார்த்து இந்தப்ஃபைலை உன்னிடம் எப்படியும் சேர்க்கவேண்டும் என்று நான் எடுத்த முயற்சி வீண்போகவில்லை.நீ இங்குதான் வந்திருப்பாய் என்று யூகித்துதான் இங்குவந்தேன்.இந்தக்கூட்டத்தில் உன்னைத்தேடுவது கடினம் என்றுதான் இவர்களின் உதவியை நாடினேன். அவ்ர்களும் தக்கசமயத்தில் உதவினார்கள்.உனக்கு நல்ல எதிர்காலம்இருக்கிறது.கவனமாகசென்று வா!"என்றார். நேரத்தைப்பார்க்கிறான்.மணி 10 1/2.அவன் எண்ணத்தை அறிந்தவராக,நிலையஅதிகாரி"தம்பி,இவரது வேண்டுகோளுக்கிணங்கி நீ போகவிருக்கும் புகைவண்டியை1/2 மணி நேரம் தாமதிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.எனவே நீதைரியமாகப்போய் வா!"என்றார்.பெரியவரும் அவனது இருக்கைவரை வந்து அவனை வாழ்த்தி சென்றுவிட்டார். புகைவண்டி மெல்ல புறப்படுகிறது;நடந்ததெல்லாம் கனவுபோல் இருக்கிறது.அந்தப்பெரியவர் சென்ற திசைநோக்கி வண்ங்குகிறான்.முன்பின் தெரியாத தனக்கு அந்தப்பெரியவர் செய்திருக்கும் உதவியை எண்ணிப்பார்க்கிறான்.தன் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்து விட்டது போல் உணர்கிறான்.பள்ளியில்தமிழாசிரியர்"செய் நன்றியறிதல்" என்ற அதிகாரத்தில் சொல்லித்தந்த குறள் நினைவுக்கு வருகிறது. "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது." ஆம்! எவ்விதமான பிரதிபலனும் கருதாமல்,தக்கசமயத்தில்,தனக்கு தொடர்பே இல்லாத, தன்னால் எந்த உதவியும் செய்யப்படாதஒருவர் நமக்கு செய்யும் உதவிக்குஇந்த வையகத்தையும் வானுலகத்தையும் தானமாகக்கொடுத்தாலும் ஈடாகுமா!
Thursday, December 27, 2007
Tuesday, December 11, 2007
மலையினும் உயர்ந்தது...
பொதிகை மலையின் அடிவாரம்.இனியதென்றல் வீசும் மாலைநேரம்.வழிப்போக்கர் ஒருவர் மலையின் உயரத்தையும்,அதனழகையும் பார்த்துவியந்தவாறு வந்துக்கொண்டிருக்கிறார்.எதிரே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் எழுத்தாணிக்கொண்டு ஓலைச்சுவடியில் எழுதிக்கொண்டிருக்கிறார்.அறிவொளி சுடர்விடும் அந்தமுகத்தைப்பார்க்கிறார் வழிப்போக்கர்.தனதுசந்தேகத்தை இவரிடம் கேட்கலாம் என்றுநினைத்து தனது உரையாடலைத் துவங்குகிறார். "ஐயா வணக்கம்". "வணக்கம்; என்னப்பாவேண்டும் உனக்கு?" "ஐயா,எனக்கொரு சந்தேகம். தக்களிடம் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்தமலையைப்பாருங்கள்.விண்ணைத்தொடும் அளவுக்குஉயர்ந்து நிற்கிறது பாருங்கள்என்ன கம்பீரம்மேகங்களெல்லாம் அதன்மேலுரசிச்செல்லும் அழகுதான் என்னே ஐயா,இவ்வுலகில் மலையைவிட உயர்ந்ததும் இருக்கிறதா?" "உன்னுடைய இக்கேள்விக்கு சற்று விளக்கமாகக்கூறவேண்டியிருக்கும்.பொறுமையாகக்கேட்பாயா?""சொல்லுங்கள் ஐயா". "ஒரு ஒருபெரிய மனிதர் இருக்கிறார் என்றுவைத்துக்கொள்.மிகப்பெரும் செல்வந்தர். பெரும் உலகப் புகழ் வாய்ந்தவர்.இந்த அரசாங்கமேஅவர் சொல்படி கேட்கும்.அவர் சொல்வதை இந்நாடேகேட்கும்.ஆனால் அவர் தனக்கும்இந்த புகழுக்கும் எவ்விதசம்பந்தமுமில்லாமல்,அந்த புகழை வைத்து இறுமாப்புஅடயாமல்,எல்லா மக்களும் எப்போதும் தன்னைப்பார்த்து பேசும்படி,காட்சிக்கு எளியவனாக,கடுஞ்சொற்கள்பேசாதவனாக அடக்கத்துடன் வாழ்கின்றானோ அவனது தோற்றம் தான் இந்தமலையைவிட மிகவும் உயர்ந்ததும் கம்பீரமானதும் ஆகும்.புரிகிரறதா ?""இப்போது புரிகிறது,ஐயா அடக்கத்துடன் வாழ்பவனின் தோற்றம்தான் உயர்ந்தது என்று". வழிப்போக்கர் வணங்கி விடை பெற்று சென்றபின் பெரியவர் தன் ஓலைச்சுவடியில் இந்தக்குறளை எழுதுகிறார். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது.
Monday, December 10, 2007
தருமத்தில் சிறந்தது யாதென்று கேட்டால்.......
ஒரு மனிதன் மிகவும்நல்லவன்.ஆனால் மிகவும் ஏழை..நிறைய தானதருமங்கள் செய்யவேண்டும் என்று அவருக்கு விருப்பம் உண்டு. ஆனாலும் அவருக்கு செய்வவதற்கு பொருள் இல்லை.அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.உலகில் தானதருமங்கள் செய்தால்தானே நல்லபுண்ணியம் கிடைக்கும் என்று உலகத்தார்சொல்கிறார்கள்;நம்மால் யாருக்கும் எதுவும் செய்ய இயலவில்லையே என்றுவருந்தி ,புண்ணியஸ்தலங்களுக்காவது சென்று வருவோம் என்று ஊர் ஊராகாச்சென்று வரலானார்.இப்படியாக ஒருநாளிரவு ஒரு கோவில் வாசலில்உறங்கிக்கொண்டிருந்தார்.அப்போது ஒரு கனவு கண்டார்.அவரது கனவில் பெரியவர் ஒருவர் கம்பீரமான உருவத்துடன் வலதுகையில் எழுத்தானியும்இடதுகையில் ஓலைச்சுவடியுமாகக் காட்சியளித்தார்.பெரியவர் அவரைக்கண்டதும் கடவுளே தன்முன் வந்துவிட்டது போல் ஒரு உணர்வு.இரு கரம் கூப்பி வணங்கினார்.கனவில் வந்தவர் முதியவரை நோக்கி"உன் மனதில் என்னப்பா தீராதகவலை"என்றார்.அதற்கு முதியவர்"ஐயா என்னால் யாருக்குமே எந்த வகையிலும்தானதருமங்கள் செய்ய இயலவில்லை.இப்படியிருந்தால் எனக்கு வாழ்க்கையில் என்ன புண்ணியம் ஐயாகிடக்கும்" என்றார்.அதைக்கேட்ட பெரியவர் கல கலவெனனகைத்து, கூறு கிறார்" அப்பா, இதற்காகவா கவலைப்படுகிறாய், மகனேநீ வாழ்க்கையில் யாருக்காவது தீங்கு நினைத்திருக்கிறாயா?" என்றார்.அதற்கு பெரியவர்,"ஐயா நான் மனதாலும்பிறருக்கு தீங்கு நினைத்தது இல்லை".என்றார்.கனவில் வந்தவர் சொல்கிறார்,"மகனே இவ்வுலகில் மிகச்சிறந்த தருமம் எதுவென்று உனக்குதெரியுமா,தருமங்களில் எல்லாவற்றிலும் தலைசிறந்தது,ஒருவன் தன் மனதில்எவ்விதமான களங்கமும் இல்லாதிருத்தல்தான்.இதுதான் நீ செய்யும் தான தருமங்களில் எல்லாம் முதன்மையானது.மற்றவையெல்லாம் பிறர் நம்மை பாராட்டவேண்டும் என்ற ஆரவாரத்திற்காக செய்யப்படுவதாகும்"என்று கூறி கீழ் வரும் பாடலைச்சொல்கிறார்.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற" என்று கூறிவிட்டு மறைந்தார்.பெரியவரும் தன் கவலை
நீங்கியவராக நன்றாகத்தூங்கினார்.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற" என்று கூறிவிட்டு மறைந்தார்.பெரியவரும் தன் கவலை
நீங்கியவராக நன்றாகத்தூங்கினார்.
ஆரம்பம் இனிமையாக இருக்கட்டும்.
வணக்கம் நண்பர்களே
அறிமுகம் முடிந்து எனது முதல் பதிவை இனிமயாக ஆரம்பிக்க விரும்புகிறேன்.அதனால் உங்களுக்கு இனிப்பு வழங்கவிரும்புகிறேன்.எல்லோரும் சாப்பிட்டதும் அதன் சுவை எப்படி என்றுசொல்லுங்கள். கேரட் அல்வா. தேவையானபொருட்கள்: புதிய கேரட் 1/2 கி. துருவியதேங்காய்..1கப் சீனி.............2கப்(ருசிக்குஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்)நெய்............1கப்.முந்திரி பருப்பு..20 கிராம். பால் 1/2 லிட்டர்.,ஏலக்காய் பொடி சிறிதளவு. செய்முறை: கேரட்டை நன்கு கழுவி துருவிக்கொள்ளவேண்டும்.முந்திரிபருப்பை சிறிதளவு நெய்விட்டு பொன்னிறமாக வ றுத்துக்கொள்ள வேண்டும்.அடிகணமானபாத்திரமாக இருக்கவேண்டும்.முந்திரி ப்ருப்பை எடுத்துவிட்டு அதேபாத்திரத்தில் சிறிது நெய்விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும்.அந்த தேங்காயுடன் கேரட் துருவலையும் சேர்த்து அத்துடன் பாலையும் சேர்த்து கிளறிக்கொண்டேஇருக்கவேண்டும்.நன்குநீர்வற்றி வந்த்ததும் சீனியைச்சேர்த்துகிளறவேண்டும்.அடிப்பிடிக்காமல் கிளறவேண்டும்.சிறிது கெட்டியாக வந்த்ததும் நெய்யை சிறிது சிறிதாகவிட்டு கிளறிக்கொண்டு இருந்தால் நெய்யெல்லாம் உறிந்தபின் மீண்டும் நெய்க்சியத்துவங்கும்.அல்வாவும் சட்டியில்ஒட்டாமல் சுருண்டு வரும்.அப்போதுஏலக்காய் பொடியைத்தூவிஇறக்கி நெய்தடவிய தட்டில் கொட்டி சூடாகப்பறிமாறவும்.
பீட்ரூடையும் இதேமுறையில் செய்யலாம்.இதற்கு ஏலக்காபொடிக்கு பதிலாகசிறிது ரோஸ் எசன்ஸ் 4 சொட்டுகள் சேர்க்கவேண்டும்.ஏனென்றால் பீட்ரூட்டிற்கு சிறிது காரமான நெடி இருக்கும்.எனவேரோஸ் எஸன்ஸ் கலப்பதால் அந்த காரமான நெடி இருக்காது. என்ன நண்பர்களே, ரெடியா? சாப்பிட்டுவிட்டு ருசியைச் சொல்லுங்கள்.
அறிமுகம் முடிந்து எனது முதல் பதிவை இனிமயாக ஆரம்பிக்க விரும்புகிறேன்.அதனால் உங்களுக்கு இனிப்பு வழங்கவிரும்புகிறேன்.எல்லோரும் சாப்பிட்டதும் அதன் சுவை எப்படி என்றுசொல்லுங்கள். கேரட் அல்வா. தேவையானபொருட்கள்: புதிய கேரட் 1/2 கி. துருவியதேங்காய்..1கப் சீனி.............2கப்(ருசிக்குஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்)நெய்............1கப்.முந்திரி பருப்பு..20 கிராம். பால் 1/2 லிட்டர்.,ஏலக்காய் பொடி சிறிதளவு. செய்முறை: கேரட்டை நன்கு கழுவி துருவிக்கொள்ளவேண்டும்.முந்திரிபருப்பை சிறிதளவு நெய்விட்டு பொன்னிறமாக வ றுத்துக்கொள்ள வேண்டும்.அடிகணமானபாத்திரமாக இருக்கவேண்டும்.முந்திரி ப்ருப்பை எடுத்துவிட்டு அதேபாத்திரத்தில் சிறிது நெய்விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும்.அந்த தேங்காயுடன் கேரட் துருவலையும் சேர்த்து அத்துடன் பாலையும் சேர்த்து கிளறிக்கொண்டேஇருக்கவேண்டும்.நன்குநீர்வற்றி வந்த்ததும் சீனியைச்சேர்த்துகிளறவேண்டும்.அடிப்பிடிக்காமல் கிளறவேண்டும்.சிறிது கெட்டியாக வந்த்ததும் நெய்யை சிறிது சிறிதாகவிட்டு கிளறிக்கொண்டு இருந்தால் நெய்யெல்லாம் உறிந்தபின் மீண்டும் நெய்க்சியத்துவங்கும்.அல்வாவும் சட்டியில்ஒட்டாமல் சுருண்டு வரும்.அப்போதுஏலக்காய் பொடியைத்தூவிஇறக்கி நெய்தடவிய தட்டில் கொட்டி சூடாகப்பறிமாறவும்.
பீட்ரூடையும் இதேமுறையில் செய்யலாம்.இதற்கு ஏலக்காபொடிக்கு பதிலாகசிறிது ரோஸ் எசன்ஸ் 4 சொட்டுகள் சேர்க்கவேண்டும்.ஏனென்றால் பீட்ரூட்டிற்கு சிறிது காரமான நெடி இருக்கும்.எனவேரோஸ் எஸன்ஸ் கலப்பதால் அந்த காரமான நெடி இருக்காது. என்ன நண்பர்களே, ரெடியா? சாப்பிட்டுவிட்டு ருசியைச் சொல்லுங்கள்.
Saturday, December 8, 2007
பதிவிற்கு புதியவன்.... அன்பிற்கு இனியவன்.
தங்கள் எண்ணங்கள் என்ற முத்துக்களால் தேன்கூடு வலைப்பதிவை அழகுடன் அலங்கரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கம்.
நான் இப்பதிவிற்கு புதியவன், ஆனாலும் தங்களின் பதிவுகளைத்தவறாமல் படித்து வருபவன். அரசியல், சமூகம், கவிதை, சினிமா.. இப்படி எதுவானாலும் நயம்பட தாங்கள் வலையில் பின்னுவதைப் பார்த்து, நாமும் ஏதேனும் எழுதவேண்டும் என்று எனக்குள் அரும்பிய எண்ணம் இன்று மலர்ந்தது. மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மொழியாலும் இனத்தாலும் நாம் தமிழர்கள் என்ற உணர்வு.. குறிப்பாக வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு, இந்த உணர்வு சற்று அதிகமாகவே இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
...தன்மானசிங்கம், பகுத்தறிவுபகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை தீயாய் உமிழும் சகோதரி..தமிழச்சி
...இந்தியாவின் மூத்த தலைவரும், தமிழர்களின் தனிப்பெருந்தலைவருமான கலைஞரின் போர்வாளாகச் சுழலும்..லக்கிலுக்
...எந்த செய்தியானாலும் சுவைபடக்கூறும்..ஓசை செல்லா
...மயிலாடுதுறையின் மணம்பரப்பி வரும்..ஆயில்யன்
...நம் நாட்டில் ஆழியெனசூழ்ந்திருக்கும் சாதியைப்பற்றி சாடும்..நடைவண்டி ...இந்தியாவும் இந்தியனும் எதிலும் தன்னிறைவு பெறவிரும்பும்..மா.சிவகுமார்
மேலும் நண்பர்..ஆசிப்மீரான்,ஜமாலன்,இட்லிவடை...இவர்களின் பதிவுகளும் மிகவும் பிடிக்கும்.
என்னைப்பற்றி: பிறந்தது, வளர்ந்தது... மூன்று மதங்களும் சங்கமித்து மதங்களின் நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் நாகை மாவட்டத்தில்.
இளநிலை பட்டப்படிப்பு குடந்தை அரசினர் கலை கல்லூரி(இரசாயனம்)முதுநிலை பட்ட படிப்பு ராஜதானி கல்லூரி (பிரசிடென்சி) சென்னை
..இறுதியாண்டுமுடிப்பதற்குள் தேசியமயமான வங்கியில் அலுவலர் பணி.
இந்தியாவின் பல மாநிலங்களையும் 3 வருடத்திற்கு ஒருமுறை சுற்றியது போதும் என்று விருப்ப ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக தற்போதய பணி.
பள்ளிப்பருவம் முதல்..தமிழின் மீது தனியாதப்பற்று. இளநிலைபட்ட படிப்பில் இரசாயனத்தை தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்று தமிழக அரசின் விருது வாங்கியவன்
மனதுக்கு பிடித்த மதிப்புமிக்க தலைவர்கள்....
தந்தை பெரியார், அன்னை இந்திரா காந்தி, கலைஞர்.
கவிஞர்களில்....
பாரதியார், பாரதிதாசன்.
படித்ததில் பிடித்தது....
கல்கியின் பொன்னியின் செல்வன்,
அகிலனின் பாவைவிளக்கு,
தி.ஜானகிராமானின் மோகமுள், மரப்பசு, அம்மாவந்தாள்.
கி.ராஜ நாராயணனின் கரிசல்காட்டு கடுதாசி.
நீல.பத்மநாபனின் தலைமுறை.
பாரதிதாசனின் குடும்பவிளக்கு.
கலைஞரின் பொன்னர்-சங்கர்
இவை எல்லாவற்றையும் விட மனிதர்களை நேசிப்பதும், நல்லவர்களுடன் நட்பை வளர்ப்பதும் மிகவும் பிடிக்கும். அறிமுகம் போதும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
நன்றி. வணக்கம் நண்பர்களே
Posted by சீனி.செயபால் at 3:22 AM 0 comments
Labels: Introducing
Subscribe to: Posts (Atom)
Saturday, December 1, 2007
பதிவிற்கு புதியவன்.... அன்பிற்கு இனியவன்.
தங்கள் எண்ணங்கள் என்ற முத்துக்களால் தேன்கூடு வலைப்பதிவை அழகுடன் அலங்கரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கம்.
நான் இப்பதிவிற்கு புதியவன், ஆனாலும் தங்களின் பதிவுகளைத்தவறாமல் படித்து வருபவன். அரசியல், சமூகம், கவிதை, சினிமா.. இப்படி எதுவானாலும் நயம்பட தாங்கள் வலையில் பின்னுவதைப் பார்த்து, நாமும் ஏதேனும் எழுதவேண்டும் என்று எனக்குள் அரும்பிய எண்ணம் இன்று மலர்ந்தது. மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மொழியாலும் இனத்தாலும் நாம் தமிழர்கள் என்ற உணர்வு.. குறிப்பாக வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு, இந்த உணர்வு சற்று அதிகமாகவே இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
...தன்மானசிங்கம், பகுத்தறிவுபகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை தீயாய் உமிழும் சகோதரி..தமிழச்சி
...இந்தியாவின் மூத்த தலைவரும், தமிழர்களின் தனிப்பெருந்தலைவருமான கலைஞரின் போர்வாளாகச் சுழலும்..லக்கிலுக்
...எந்த செய்தியானாலும் சுவைபடக்கூறும்..ஓசை செல்லா
...மயிலாடுதுறையின் மணம்பரப்பி வரும்..ஆயில்யன்
...நம் நாட்டில் ஆழியெனசூழ்ந்திருக்கும் சாதியைப்பற்றி சாடும்..நடைவண்டி
...இந்தியாவும் இந்தியனும் எதிலும் தன்னிறைவு பெறவிரும்பும்..மா.சிவகுமார்
...இந்தியாவும் இந்தியனும் எதிலும் தன்னிறைவு பெறவிரும்பும்..மா.சிவகுமார்
மேலும் நண்பர்..ஆசிப்மீரான்,ஜமாலன்,இட்லிவடை...இவர்களின் பதிவுகளும் மிகவும் பிடிக்கும்.
என்னைப்பற்றி: பிறந்தது, வளர்ந்தது... மூன்று மதங்களும் சங்கமித்து மதங்களின் நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் நாகை மாவட்டத்தில்.
இளநிலை பட்டப்படிப்பு குடந்தை அரசினர் கலை கல்லூரி(இரசாயனம்)முதுநிலை பட்ட படிப்பு ராஜதானி கல்லூரி (பிரசிடென்சி) சென்னை
..இறுதியாண்டுமுடிப்பதற்குள் தேசியமயமான வங்கியில் அலுவலர் பணி.
இந்தியாவின் பல மாநிலங்களையும் 3 வருடத்திற்கு ஒருமுறை சுற்றியது போதும் என்று விருப்ப ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக தற்போதய பணி.
பள்ளிப்பருவம் முதல்..தமிழின் மீது தனியாதப்பற்று. இளநிலைபட்ட படிப்பில் இரசாயனத்தை தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்று தமிழக அரசின் விருது வாங்கியவன்
மனதுக்கு பிடித்த மதிப்புமிக்க தலைவர்கள்....
தந்தை பெரியார், அன்னை இந்திரா காந்தி, கலைஞர்.
கவிஞர்களில்....
பாரதியார், பாரதிதாசன்.
படித்ததில் பிடித்தது....
கல்கியின் பொன்னியின் செல்வன்,
அகிலனின் பாவைவிளக்கு,
தி.ஜானகிராமானின் மோகமுள், மரப்பசு, அம்மாவந்தாள்.
கி.ராஜ நாராயணனின் கரிசல்காட்டு கடுதாசி.
நீல.பத்மநாபனின் தலைமுறை.
பாரதிதாசனின் குடும்பவிளக்கு.
கலைஞரின் பொன்னர்-சங்கர்
இவை எல்லாவற்றையும் விட மனிதர்களை நேசிப்பதும், நல்லவர்களுடன் நட்பை வளர்ப்பதும் மிகவும் பிடிக்கும். அறிமுகம் போதும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
நன்றி. வணக்கம் நண்பர்களே
Subscribe to:
Posts (Atom)